கரோனா பாதிப்பு 90 லட்சத்தை கடந்தது 84 லட்சம் பேர் குணமடைந்தனர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 45,882 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,04,365 ஆக உயர்ந்துள்ளது. இதில் 84,28,409 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 44,807 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 93.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 4,43,794 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 584 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,32,162 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 80,728 பேர் கர்நாடகாவில் 25,188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் புதிதாக 1,316 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,58,711 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,35,801 பேர் குணமடைந்துள்ளனர். 16,000 பேர் சிகிச்சையில் உள்ளணர். 6,910 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் நேற்று 6,028 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 5,53,669 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,81,718 பேர் குணமடைந்துள்ளனர். 67,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்