தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது. ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகை காலத்துக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி டெல்லியில் ஒரே நாளில் 8,539 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் அதே தினத்தில் 104 பேர் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், முதல்வர் கேஜ்ரிவால், சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள், டெல்லி அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது தலைநகரில் அதிகஅளவில் பரவி வரும் கரோனாவைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த 7 முதல் 10 நாட்களில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அப்போது தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மட்டும்டெல்லியில் 7,340 பேர் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டனர். மேலும் 96 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் மட்டும் இதுவரை 4,30,195 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். மேலும் 44,456 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் வரும்30-ம் தேதி வரை பட்டாசுகள்வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 21, 22-ம் தேதிகளில் நடத்தப்படும் சாத் பூஜையை பொது இடங்களில் நடத்துவதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
42 mins ago
சுற்றுச்சூழல்
52 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago