மோடி, நிதிஷ் உட்பட யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பேட்டி

By செய்திப்பிரிவு

பிஹார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), இடதுசாரிகள் அடங்கிய மெகா கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றியது. மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ஆர்ஜேடி உருவெடுத்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் ஆள்பலம், பணபலத்தை பயன் படுத்தினர். ஆனால் இந்த 31 வயது தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. தனிப்பெரும் கட்சியாக சட்டப்பேரவையில் ஆர்ஜேடி அமர்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

பளபளவென இருந்த நிதிஷ்குமாரின் முகத்தை இப்போது பாருங்கள். அவர் தற்போது 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதுதான் மாற்றத்துக்கான நேரம் என்று மக்கள் வாக்களித்தனர். நிதிஷ் குமார் வேண்டுமானால் முதல்வர் நாற்காலியில் அமரலாம். ஆனால் நாங்கள் மக்களின் மனதில் அமர்ந்திருக்கிறோம். பின்வாசல் வழியாக வந்து ஆட்சியைப் பிடிக்க முயல்கிறார் நிதிஷ் குமார்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

20 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்