கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5.2 லட்சம் பேருக்கு சிகிச்சை

By செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. தற்போது 5.2 லட்சம் பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று 47,724 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 84,11,724 ஆக உயர்ந்துள்ளது. இதில் 77,65,966 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 54,157 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 92.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 5,20,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்றைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. ஒரே நாளில்670 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,24,985 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 5,246 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,03,444 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,51,282 பேர் குணமடைந்துள்ளனர். 1,07,368 பேர் சிகிச்சையில் உள்ளனர். 44,804 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 3,156 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,38,929 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,94,503 பேர் குணமடைந்துள்ளனர். 33,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,312 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 2,745பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,35,953 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,07,318 பேர் குணமடைந்துள்ளனர். 21,878 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,757 பேர் உயிரிழந் துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,852 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,91,354 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,61,073 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23,150 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,131 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் நேற்று 7,002 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 4,73,468 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,88,504 பேர் குணமடைந் துள்ளனர். 83,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,640 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் புதிதாக 6,715 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,16,653 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,71,155 பேர் குண மடைந்துள்ளனர். 38,729 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,769 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் புதிதாக 3,948 பேருக்கு வைரஸ் தொற்றுஉறுதி செய்யப்பட்டது. அந்தமாநிலத்தில் 3,93,524 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3,50,449 பேர் குணமடைந்துள்ளனர். 35,953 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,122 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்