புதுடெல்லி: பாஜக தலைவர் ஜே.பி. நட்டா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்தின. அப்போது நமது ராணுவ வீரர்களையும் அவர்களின் வீரத்தையும் காங்கிரஸ் கட்சியினர் கிண்டல் செய்தனர்.
ஆனால் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப் பட்டபோது இந்தியா தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் பயந்ததாக தற்போது பாகிஸ்தான் எம்.பி.யே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதற்கு பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை உலகம் முழுவதும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் எம்.பி. கூறியதிலிருந்து காங்கிரஸ் தனது கருத்துகளை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
48 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago