முகக் கவசம், கையுறைகள், பல்ஸ்-ஆக்சி மீட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களுக்கான அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதில் இருந்தே முகக் கவசம், கையுறைகள், சானிடைசர்கள் போன்றவற்றின் தேவை அதிகரித்துள்ளது. தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்தபோது ரத்த ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பை பரிசோதிப்பதற்கான பல்ஸ்-ஆக்சி மீட்டர்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில மருந்தகங்களும் சில்லறை விற்பனையாளர்களும் இந்தப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
பொதுவாக ரூ.600 முதல் ரூ.800 வரை உள்ள ஒரு பல்ஸ்- ஆக்சி மீட்டர், சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில் ரூ.4 ஆயிரத்துக் கும் மேல் விற்பனை செய்யப் படுகிறது. அதேபோன்று ஒரு முறை பயன்படுத்தப்படும் கையு றைகளும், முகக் கவசங்களும், சானிடைசர்களும் அதிக விலைக்கே விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதையடுத்து, அவற்றின் விலையை ஒழுங்கு முறைப்படுத்தி தமிழக சுகா தாரத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் பொருட்களுக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் அனைத்தும் சாமானிய மக்களுக்கு நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருந்துத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் அத்தகைய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சானிடைசர் (200 மி.லி) - ரூ.110, என்95 முகக் கவசம் - ரூ.22, ஈரடுக்கு முகக் கவசம் - ரூ.3, மூன்றடுக்கு முகக் கவசம் - ரூ.4, மூன்றடுக்கு மெல்ட்பிளவுன் வகை முகக் கவசம் - ரூ.4.50, பிபிஇ கிட் - ரூ.273, ஒருமுறை பயன்படுத்தும் மேல் அங்கி (ஆப்ரான்) - ரூ.12, அறுவை சிகிச்சை கூடத்தில் அணியும் அங்கி (சர்ஜிக்கல் கவுன்) - ரூ.65, அறுவைக் கூட கையுறை - ரூ.15, பரிசோதனைக்கு பயன்படும் கையுறை - ரூ.5.75, சுவாச சிகிச்சைக் கான மாஸ்க் (நான் ரீ ப்ரீத்) - ரூ.80, ஆக்சிஜன் மாஸ்க் - ரூ.54, ஆக் சிஜன் ஓட்ட கருவி (ஃப்ளோ மீட்டர்) - ரூ.1,520, பல்ஸ்-ஆக்சி மீட்டர் - ரூ.1,500, முகத்தை முழுமையாக மறைக்கும் கவசம் (ஃபேஸ் ஷீல்ட்) - ரூ.21 என விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இனிமேல், இந்த விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற் பனை செய்யப்படுவதை தடுக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
48 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
3 hours ago