வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது

By செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப் பட்டுள்ள சட்டத்தை செயல்படுத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கென உள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவை யில் கடந்த பிப்.26-ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதில் மிக பிற்படுத்தப்பட்டோ ருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், 'எம்பிசி-வி' என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய் கிறது. மீதம் உள்ள 2.5 சதவீதம் மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக் கான இடஒதுக்கீடு ஆகும்

இந்நிலையில் இந்த உள்ஒதுக் கீடு சட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி தென்நாடு மக்கள் கட்சி நிறுவனர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் வன்னியர், வன்னிய கவுண் டர், வன்னிய குல ஷத்ரியர் என 7 பிரி வினருக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற் றப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமி ழகத்தில் சாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது என தெரிய வில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர்மரபினர் பிரிவினருக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்நிலையில், வன்னியர் களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள மற்ற 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். இதனால் அந்த 22 சாதியினர் பாதிக்கப்படுவர்.

தேர்தல் நெருங்கும் நிலையில்..

உண்மையிலேயே வன்னியர் களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அதை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நிலையில் வன்னியர்களுக்கான இந்த உள்ஒதுக்கீடு என்பது அரசியல் லாபத்துக்காகவே இயற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையோ அல்லது அந்த சட்டத்தை செயல்படுத்தவோ கூடாது என தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 mins ago

விளையாட்டு

16 mins ago

சினிமா

17 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

57 mins ago

இந்தியா

38 mins ago

கருத்துப் பேழை

47 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்