தமிழகம், புதுச்சேரியில் 2 நாட் களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் சே.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலவி வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலு குறையும். 5-ம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கேரள பகுதியை நோக்கி நகரும்.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச் சேரியில் கனமழை நீடிக்கும். குறிப்பாக கடலூர், நாகப் பட்டினம், ராமநாதபுரம், திரு வாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின் னலுடன் கூடிய அதிகனமழை யும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திரு வண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், ராணிப் பேட்டை, சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, திருவள் ளூர், காரைக்கால் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய் யக்கூடும்.
சேலம், நாமக்கல், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு மித மான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.
வட கிழக்கு பருவமழை கால கட்டத்தில் (அக்டோபர் 1 முதல் இன்று வரை) தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 36 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 1 செ.மீ. குறைவு.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத் தில் 36 செ.மீ., சிதம்பரத்தில் 34, லால்பேட்டையில் 28, பரங்கிப்பேட்டையில் 26, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடியில் தலா 25, திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago