தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக நவ.11 முதல் 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கம் கட்டணத்தில் மாற்றம் இல்லை என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு 14,757 சிறப்பு பேருந்துகள் வரும் நவ.11 முதல் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை களின்போது சென்னையில் வசிப் பவர்கள் தங்கள் சொந்த ஊர் களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கி வருகின்றன. சென்னையில் இருந்து மட்டுமின்றி, மற்ற பகுதி களில் இருந்தும் சிறப்புப் பேருந்து கள் இயக்கப்படும். அதேபோல, பண்டிகை முடிந்ததும் வெளியூர் சென்றவர் திரும்பி வருவதற்காக வும் சிறப்புப் பேருந்துகள் இயக் கப்படும்.

தமிழகத்தில் இந்த ஆண்டு தீபா வளிப் பண்டிகை வரும் 14-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப் படுகிறது. இதையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர் பாக தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் போக்குவரத்துத் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையர் டி.எஸ்.ஜவகர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத் தினர். இதைத் தொடர்ந்து அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலை மையில் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய தாவது:

தீபாவளியை முன்னிட்டு 5-வது ஆண்டாக சென்னையில் 5 இடங் களில் இருந்து சிறப்புப் பேருந்து கள் இயக்கப்பட உள்ளன. செங் குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக் கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலை யத்தில் இருந்தும், கிழக்கு கடற் கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், திண்டிவனம், விக்கிர வாண்டி, பண்ருட்டி வழியாக கும்ப கோணம், தஞ்சை செல்லும் பேருந் துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

திண்டிவனம் வழியாக திரு வண்ணாமலை, போளூர், சேத்துப் பட்டு, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், புதுச்சேரி செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், வேலூர், ஆரணி, ஆற் காடு, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி செல்லும் பேருந்து கள் பூந்தமல்லி பேருந்து நிலையத் தில் இருந்தும், நாகை, மயிலாடு துறை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், கோவை செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

13 முன்பதிவு மையங்கள்

இதுதவிர, ஆம்னி பேருந்துகள், அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் ஊரப் பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்க வசதி செய்யப் பட்டுள்ளது. கோயம்பேட்டில் 10, சானடோரியம் பேருந்து நிலையத்தில் 2, பூந்தமல்லியில் 1 என மொத்தம் 13 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று (நேற்று) வரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கரோனா பரவல் காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான சிறப்புப் பேருந்து களையே இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

கடந்த ஆண்டு சென்னை மற்றும் மற்ற ஊர்களில் இருந்து மொத்தம் 18,547 சிறப்புப் பேருந்து கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு நவம்பர் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களில் 14,757 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, தீபாவளிக்குப் பிறகு கடந்த ஆண்டில் 18,866 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 15 முதல் 18-ம் தேதி வரை 16,026 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண் டிகையின்போது 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பயணித்தனர். இந்த ஆண்டு 5 லட்சம் பேர் பயணிப் பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம். பயணிகள் குறை வாகவே வருவார்கள் என்ற போதிலும், ஒரு பேருந்தில் 60 சதவீதம் பயணிகளை மட்டும் ஏற்ற ஏற்பாடு செய்துள்ளோம்.

போக்குவரத்துக் கழகம் மட்டு மின்றி அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் 10 சதவீதம் போனஸ் வழங்கப் பட்டுள்ளது.

இதர மாநிலங்களில் ஊழியர் களுக்கு 50 சதவீதம் மட்டுமே சம்பளம் வழங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப் படாத நிலையிலும் முழுமையான சம்பளம் வழங்கியுள்ளோம். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அவர் களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம். பேருந்து கட்டணத் தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது பல்வேறு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப் பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நெரிசலை தவிர்க்க..

இந்த ஆண்டு முன்பதிவு செய்த வர்களுக்காக கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் பேருந்து கள், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிவட்ட சுற்றுச்சாலை, வண்ட லூர் வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று தாம்பரம், பெருங்களத்தூ ரில் இருந்து வரும் பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும், போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் தாம் பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக் கழுக்குன்றம்- செங்கல்பட்டு அல்லது பெரும்புதுார் - செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்