போக்குவரத்து கழகம், மின்வாரியம், டாஸ்மாக் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

போக்குவரத்துக் கழகம், மின்வாரி யம், டாஸ்மாக் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் 2 லட்சத்து 91,975 சி மற்றும் டி பிரிவு பணியாளர் களுக்கு 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழி லாளர்கள், பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன் னிட்டு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் கரு ணைத்தொகை, போனஸ் வழங்கப் பட்டது. இதுதவிர, போக்குவரத்து கழகம், மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள், டாஸ்மாக் ஊழியர் களுக்கான போனஸ் குறித்து தனித் தனியாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி போனஸ் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, கரோனா ஊரடங் கால் பல பொதுத்துறை நிறுவனங் களின் வருவாய் பாதிக்கப்பட்டுள் ளது. ஏற்கெனவே தமிழக அரசு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத் துள்ளது. மேலும், அரசின் செல வினங்களைக் குறைக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. புதிய பணியாளர்கள் நியமனம் போன்றவற்றுக்கும் தடை விதித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படுமா என்று பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்கள் 30 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கடந்த அக்.27-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி, ரூ.3,737 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அனைத்து ஊழியர்களுக்கும் அவர் கள் வங்கிக்கணக்கில் பணம் செலுத் தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதன் மூலம், பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

தீபாவளி முன்பணம்

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் தீபாவளி முன்பணம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், தமிழக பொதுத்துறை நிறுவன தொழிலாளர் கள், பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகையை தமி ழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர் கள் உழைப்பு முக்கிய பங்கு வகிக் கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்க மும் உற்சாகமும் அளிக்கும் வகை யில், இந்த ஆண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாட 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ், கருணைத் தொகை வழங்கப்படுகிறது.

கரோனா தொற்றின் தாக்கம் உலகெங்கிலும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களாலும் உணரப் பட்டுள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தைக் குறைக்க நாடு முழு வதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள் உள்ளடங்கிய அனைத்து வணிக நிறுவனங்களின் செயல்பாட்டை பாதித்துள்ளது.

குறிப்பாக தொழிலாளர் முக்கியத் துவம் வாய்ந்த அரசு நிறுவனங்களான அரசு போக்குவரத்துக் கழகங் கள், மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகம், நுகர்பொருள் வாணிபக்கழகம், தேயிலை தோட்டக் கழகம் உட்பட பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வருமானம் குறைவு

கடந்த 6 மாதங்களில் பொது போக்குவரத்து இயங்காததாலும், தொழிற்சாலைகள் முழு அளவில் செயல்படாததாலும் இந்த நிறுவனங் களின் இயக்க வருமானம் மிகவும் குறைந்துவிட்டது. இருந்தபோதிலும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடும்ப நலனை கருத்தில்கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறு வனங்கள், போனஸ் வழங்குவற்கு தேவையான ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இருந்தபோதிலும், சவால் களை எதிர்கொண்டு வருகின்றன. திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படு கிறது.

லாபம் ஈட்டியுள்ள, நஷ்டம் அடைந் துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதி யுள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ.8,400 கிடைக்கும். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 2 லட்சத்து 91,975 தொழிலாளர்களுக்கு ரூ.210 கோடியே 48 லட்சம் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக கிடைக்கும். அரசின் இந்த நட வடிக்கை பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தீபாவளியை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

30 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

சினிமா

56 mins ago

வணிகம்

38 mins ago

இந்தியா

50 mins ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

சினிமா

51 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்