தமிழகத்தில் கரோனா பரிசோதனை களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. புதிதாக 2,504 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,509, பெண்கள் 995 என மொத்தம் 2,504 பேர் கரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்ச மாக சென்னையில் 684, கோவை யில் 248, செங்கல்பட்டில் 145, திரு வள்ளூரில் 136, சேலத்தில் 110 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமி ழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 27,026 ஆக அதிகரித் துள்ளது. இதுவரை சென்னையில் 1 லட்சத்து 89,866 பேர் உட்பட தமி ழகம் முழுவதும் 6 லட்சத்து 94,880 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 792 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 3,644 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென் றனர். சென்னையில் 7,005 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 20,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 15 பேர், தனியார் மருத்துவமனைகளில் 15 பேர் என நேற்று 30 பேர் உயிரிழந் தனர். அதிகபட்சமாக சென்னை யில் 11 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 11,152 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,662 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 533, செங் கல்பட்டில் 43,840, கோவையில் 43,504, திருவள்ளூரில் 38,023 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.
தமிழகத்தில் 203 அரசு மற் றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1கோடியே 29,222 பரி சோதனைகள் நடைபெற்றுள் ளன. நேற்று மட்டும் 73,012 பரி சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 25,926, 13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட் சத்து 11,389 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 89,711 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
க்ரைம்
5 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
8 hours ago