“பள்ளிக்கு வரும் மனநிலையை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்!”
சு.உமா மகேஸ்வரி, அரசுப் பள்ளி ஆசிரியர், ‘நமது கல்விச் சிக்கல்கள்’ என்னும் நூலின் ஆசிரியர்.
கடந்த ஆண்டு சில மாதங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் இரண்டாம் அலையின் காரணமாக 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் அமைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் அசிரத்தையுடன் இருக்கக்கூடும். ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் கணிசமானோர் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். அவர்களைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகளை அரசு தொடங்கிவிட்டது. இவர்கள் அனைவரையும் மீண்டும் பள்ளிக்கு வரவைக்க வேண்டும். வேலைக்குப் போகாதவர்களும் அதிக நேரம் வீட்டில் இருந்தபடியும் வெளியில் விளையாடியும் பொழுதைக் கழிக்கப் பழகிவிட்டனர். இவர்களை எல்லாம் பள்ளிக்கு வரவைத்து, தினமும் சில மணி நேரம் வகுப்பில் உட்காரப் பழக்குவது எளிதல்ல. பள்ளிக்கு வருவது, ஆசிரியரிடமிருந்து கல்வி கற்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு புரியவைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் பாடங்களைக் கற்பிப்பதில் முழுமையான கவனம் செலுத்த முடியும். ஆசிரியர்களுக்கு இது கூடுதல் பணிச் சுமைதான். கரோனா பெருந்தொற்றால் பல ஆசிரியர்கள் மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருப்பார்கள். இதையெல்லாம் மாணவர்களிடம் காண்பித்துவிடக் கூடாது. அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
வணிகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
கல்வி
44 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago