ரங்கம் ரங்கநாதர் கோயிலில் - டிச.3 முதல் வைகுண்ட ஏகாதசி விழா : சொர்க்கவாசல் டிச.14-ம் தேதி திறப்பு

By செய்திப்பிரிவு

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.3-ம் தேதி தொடங்கி 24-ம்தேதி வரை விமரிசையாக நடைபெறவுள்ளது.

‘பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும் ‘திருஅத்யயன உற்சவம்’ எனப்படும் வைகுண்ட ஏகாதசி பெரு விழா சிறப்பு வாய்ந்தது.

இந்த ஆண்டு இவ்விழா டிச.3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. டிச.4-ம்தேதி பகல்பத்து (திருமொழி திருநாள்) தொடங்குகிறது. 12-ம்தேதி வரை தினந்தோறும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல் பத்து திருநாளில் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் டிச.13-ம் தேதி நடை பெறவுள்ளது.

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு டிச.14-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முதல் ராப்பத்து திருநாள் (திருவாய்மொழித் திருநாள்) தொடங்குகிறது.

தொடர்ந்து டிச.20-ம் தேதி திருக்கைத்தல சேவை, 21-ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 23-ம் தேதி தீர்த்தவாரி, 24-ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் மற்றும் இயற்பா சாற்றுமுறை ஆகியவை நடைபெறவுள்ளன.

இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

33 mins ago

ஜோதிடம்

36 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்