அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராக - முதல்வரை நிர்ப்பந்திக்கக் கூடாது : சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் மீதானவிசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என அவரை நிர்ப்பந்திக்கக் கூடாதுஎன சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில், தற்போதைய முதல்வர் ஸ்டாலின்உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கிகொள்முதல் உள்ளிட்ட பல்வேறுபிரச்சினைகள் குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்ததற்காக அவர் மீது 17 குற்றவியல் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், கடந்த ஆட்சியில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும்திரும்பப் பெறப்படும் என தெரிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவதற்கு முன்பாக உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 17 குற்றவியல் அவதூறுவழக்குகளையும் திரும்பப்பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, இந்தவழக்குகள் தொடர்பான விவரங்களை அட்டவணையாக தாக்கல்செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்குகளில்முதல்வரை நேரில் ஆஜராகவேண்டும் என நிர்ப்பந்திக்கக்கூடாது என சிறப்பு நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ள நீதிபதி, இந்தவழக்கில் அக்.8 அன்று உத்தரவுபிறப்பிக்கப்படும், எனக் கூறி விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

24 mins ago

விளையாட்டு

17 mins ago

தமிழகம்

44 mins ago

க்ரைம்

55 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்