தமிழகத்தில் புதிதாக 1,658 பேருக்கு தொற்று :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 959, பெண்கள் 699 என மொத்தம்1,658 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 226, கோவையில் 224, ஈரோட்டில் 130, செங்கல்பட்டில் 126 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 38,668 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 16,636 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 29 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5, கோவையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,246 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,440 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்