தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,049, பெண்கள் 736 என மொத்தம் 1,785 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 50,282 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 24 லட்சத்து 93,583 பேர்குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,361 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர்.

26 பேர் உயிரிழப்பு

தமிழகம் முழுவதும் 22,762பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,937 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,312 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்