கரோனா காலகட்டத்தில் இணைநோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என தமிழக அரசுக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த மனுவில், ‘‘கரோனாதொற்றால் இறக்கும் நபர்களுக்குகரோனா தொற்று காரணமாக மரணம் என இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்படாததால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவிகள் மறுக்கப்படுகிறது. ஏற்கெனவே வழக்கறிஞர் கண்ணன் என்பவர் கரோனா காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளதாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இழந்துதவிக்கும் குடும்பத்துக்கு அரசின்நிதியுதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இறப்புக்குகரோனா காரணமாக இறந்தால், இறப்புச் சான்றிதழ்களில் கரோனாஇறப்பால் மரணம் என குறிப்பிட்டுசான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிமற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கியஅமர்வு, ‘‘கரோனா மரணங்கள்முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நாடுமுழுவதும் உள்ளது. தமிழகத்தைப்பொருத்தமட்டில் கரோனா பாசிட்டிவ் சான்றிதழ்கள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மரணங்களைகரோனா மரணங்கள் என பதிவு செய்வதில்லை.
கரோனா மரணம் தொடர்பாக தெளிவான பதிவுகள் இருந்தால் மட்டுமே, எதிர்காலத்தில் கரோனா தொற்றை சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும். மேலும் இறப்புகளை துல்லியமாக குறிப்பிட்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவிகளை முறையாக வழங்க முடியும்’’ என குறிப்பிட்டனர்.
அத்துடன் இணை நோய்கள் உள்ளவர்களும் கரோனாவுக்கு பலியாகி இருப்பதால் கரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களை நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும், என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
இதுதொடர்பான நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தர விட்டு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
31 mins ago
தமிழகம்
33 mins ago
க்ரைம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
கல்வி
2 hours ago