தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. முதியவர்கள் உட்பட 365 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று ஆண்கள்19,842, பெண்கள் 15,033 என மொத்தம் 34,875 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 8 பேருக்கு தொற்றுஉறுதியாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 6,297, கோவையில் 3,250, செங்கல்பட்டில் 2,275, திருவள்ளூரில் 1,778,திருப்பூரில் 1,573, மதுரையில் 1,156 பேருக்கும் வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்து 99,225 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 48,326 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 53,576 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 365 பேர்உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 91 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,734 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 6,031 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 4 லட்சத்து 56,496, கோவையில் 1 லட்சத்து 25,151, செங்கல்பட்டில் 1 லட்சத்து 20,228,திருவள்ளூரில் 86,333, காஞ்சிபுரத்தில் 53,480, மதுரையில் 50,610 என்றஎண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 267 அரசு,தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 56 லட்சத்து 4,311பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று 1 லட்சத்து 70,355 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுலா
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
6 hours ago