தமிழகத்தில் கரோனா தொற்று - 32 ஆயிரத்தை நெருங்கியது : முதியவர்கள் உட்பட 288 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 32 ஆயிரத்தை நெருங்கியது. முதியவர்கள் உட்பட 288 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்18,359, பெண்கள் 13,533 என மொத்தம் 31,892 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு தொற்றுஉறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,538, செங்கல்பட்டில் 2,225, கோவையில் 3,197, திருவள்ளூரில் 1,410, மதுரையில் 1,250, கன்னியாகுமரியில் 1,025, திருச்சியில் 1,224 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 31,377 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 44,313 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 95,339 பேர் சிகிச்சையில்உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 288 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 74 பேர் இறந்துள்ளனர்.

சென்னையில் பாதிப்பு குறைவு

சென்னையில் 7 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்த பாதிப்பு, நேற்று முன்தினமும், நேற்றும் 7 ஆயிரத்துக்குள் குறைந்துள்ளது. அதேநேரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்