தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், ஓய்வூதிய குறைதீர்வு கூட்டம் வரும் 25-ம் தேதி நடத்தப்படுகிறது.
தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் 1995-ன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) அலுவலகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் 25-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.
எனவே, ஓய்வூதியம் தொடர்பான குறைகளுக்கு தீர்வுகாண விரும்பும் ஓய்வூதியர்கள் வரும் 22-ம் தேதிக்குள் நேரில் அல்லது, pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரியில் ‘PENSIONADALAT FOR EPS 1995’ என்று குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்என்று சென்னை வடக்கு, தெற்கு மண்டல அலுவலக, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 ரிதுராஜ் மேதி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
உலகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago