கரோனா தடுப்பூசி மையங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தமிழகத்தில் 1,300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் தடுப்பூசிக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட வேண்டும் என்பதால் இன்று ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி மையங்கள்செயல்படவுள்ளன.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, “தடுப்பூசி போட்டுக் கொள்ள முதியோர் ஆர்வமாக வருகின்றனர். தேர்தல் நாள் நெருங்கி வருவதால்,தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. அதனால், மார்ச் 7-ம் தேதி (இன்று) ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி மையங்கள் செயல்படும். விருப்பமுள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
57 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago