பிப்.27-ம் தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை கூட்டத்தொடர் காரணமாக பிப்.27-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அரசின் இடைக்கால பட்ஜெட்டைதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த கூட்டத் தொடரைபிப்.25 (இன்று) முதல் 27-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பேரவையில் 27-ம்தேதி இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை அளிக்கிறார். இதையொட்டி பொதுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் பிப்.27-ம் தேதிசனிக்கிழமை பட்ஜெட் மீதானவிவாதம், சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ளன. எனவே, 27-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

59 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்