சட்டப்பேரவை கூட்டத்தொடர் காரணமாக பிப்.27-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் அரசின் இடைக்கால பட்ஜெட்டைதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த கூட்டத் தொடரைபிப்.25 (இன்று) முதல் 27-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
இதன்படி, பேரவையில் 27-ம்தேதி இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை அளிக்கிறார். இதையொட்டி பொதுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் பிப்.27-ம் தேதிசனிக்கிழமை பட்ஜெட் மீதானவிவாதம், சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ளன. எனவே, 27-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
43 mins ago
ஜோதிடம்
59 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago