சட்டப்பேரவை தேர்தலுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில்் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகளில் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கவுள்ளன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக, தங்களுக்கு சாதகமான தொகுதிகளை தேர்வு செய்யும் பணியில் ஆர்வம் காட்டிவருகிறது. கடந்த சட்டப்பேரவைதேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்ற விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து, கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் இக்கட்சி தொடர்கிறது.இந்நிலையில், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்வு செய்யும் பணியில் விசிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதுதொடர்பாக விசிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த சட்டப்பேரவை தேர்தலில்25 தொகுதிகளில் போட்டியிட்டோம். இதில் பெரும்பாலான தொகுதிகளில் 35 ஆயிரம் வாக்குகள் வரையில் பெற்றோம். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. தனி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தையின்போது எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம்.
தற்போது, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, தேர்தல் நிதிக்குழு, தேர்தல் பிரச்சாரக் குழுஎன 3 குழுக்கள் நியமித்து தேர்தல் பணியை தொடங்கியுள் ளோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
இந்தியா
14 hours ago