மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட்வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர்களாக ஜே.சுவாமிநாதன், அஷ்வினி குமார் திவாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
சுவாமிநாதன் இதற்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாண்மை இயக்குநராகப் (நிதி) பதவி வகித்து வந்தார். இவ் வங்கியில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், தலைமை மின்னணு அதிகாரியாக பணிபுரிந்தபோது, ‘யோனோ’என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
அஸ்வினி குமார் திவாரி, இதற்கு முன்பு எஸ்பிஐ கார்டின் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளாக இவ்வங்கியில் பணிபுரிந்து வரும் திவாரி, வங்கியின் உள்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், கொரியா ஆகிய வெளிநாட்டு வங்கிக் கிளைகளிலும் பணிபுரிந்து உள்ளார்.
எஸ்பிஐ வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago