அண்ணா பல்கலை. துணைவேந்தராக எம்.கே.சுரப்பா பதவி வகிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஆணையம்அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, ஒருவர்இருமுறைக்கு மேல் துணைவேந்தராக பதவி வகிக்க இயலாது.
அண்ணா பல்கலை. துணைவேந்தராக பதவி வகிக்கும் சுரப்பா,ஏற்கெனவே பஞ்சாப் மாநிலம் ஐஐடி-யில் இயக்குநராக 6 ஆண்டுகளுக்கு பதவி வகித்துள்ளார். அதன்பிறகு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் டீனாக பதவி வகித்துள்ளார். ஐஐடி இயக்குநர் பதவி என்பது துணைவேந்தர் பதவிக்கு நிகரானது என்பதால் ஏற்கெனவே இருமுறை பதவி வகித்துள்ள அவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்திருப்பது, பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு விரோதமானது என்பதால் அவர் பதவியில் நீடிப்பது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டிருந்தது.
ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐஐடி இயக்குநர் பதவி என்பது துணைவேந்தர் பதவிக்கு இணையானது என்பதற்கான எந்தஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
பொதுநல வழக்கு தொடர முடியாது
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago