‘ஸ்பேஸ் கிட்ஸ்’ வழிகாட்டுதலுடன் இந்திய, வங்கதேச மாணவர்கள் செயற்கைக் கோள் தயாரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

இந்திய, வங்கதேச மாணவர்கள் இணைந்து புதிய செயற்கைக் கோளை உருவாக்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியா - வங்கதேசம் இடையிலான 50 ஆண்டுகால நல்லுறவுமற்றும் 2021 மார்ச் 26-ம் தேதிகொண்டாட உள்ள வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் கூட்டு முயற்சியில் செயற்கைக் கோள் தயாரித்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ‘வங்கம் - பாரத் மாணவர் செயற்கைக் கோள்’ என்று பெயரிடப்பட உள்ளது.

‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ மற்றும்வங்கதேசத்தின் ‘குளோபல் லா திங்க்கர் சொசைட்டி’ நிறுவனம்இடையே இதற்கான புரிந்துணர்வுஒப்பந்தம் டெல்லியில் நடந்தஇந்திய குடியரசு தின விழாவின்போது கையெழுத்தானது.

அதன்படி, இரு நாட்டு மாணவர்களும் இணைந்து செயற்கைக் கோளை உருவாக்க உள்ளனர். அந்த செயற்கைக் கோளை ஜூன்மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விண்வெளி அறிவியல் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்