தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சரஸ்வதி ரங்கசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 6 உறுப்பினர்களையும் புதிதாக நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
போக்சோ சட்டத்தை கண்காணிக்கும்
இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்மலா, கடந்த ஆண்டு ஜன.8-ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். உறுப்பினர் பதவிகளும் கடந்த ஆண்டு மே மாதம் காலி யானது.
இந்நிலையில், ஆணைய தலைவராக சரஸ்வதி ரங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘‘தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்களாக எஸ்.மல்லிகை, கே.துரைராஜ், வி.ராமராஜ், சரண்யா ஜெயக்குமார், ஜெ.நந்திதா, ஐ.முரளிகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வரிடம் வாழ்த்து
இதற்கிடையே, முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, சரஸ்வதி ரங்கசாமி வாழ்த்து பெற்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
ஆன்மிகம்
21 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago