சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கு தயாராக கூடுதல் காலஅவகாசம் வேண்டும் மத்திய அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு தயாராக கூடுதல் காலஅவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு பொதுத்தேர்வு காலஅட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்விவரங்களை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நாளை (டிச.31) வெளியிட உள்ளார்.

இந்நிலையில், பொதுத்தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் மே மாதத்தில் தேர்வை நடத்த வேண்டும் என்றுசமூகவலைதளம் மூலம் மத்தியகல்வி அமைச்சருக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், சிலர் பாடத்திட்டம் இன்னும் முடிக்கப்படவில்லை எனவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானதால் மாணவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

58 secs ago

இந்தியா

9 mins ago

விளையாட்டு

10 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்