திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராகத் தேர்வு

By செய்திப்பிரிவு

2020-2022-ம் ஆண்டுகளுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், சென்னை, அடையாறில் உள்ள எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில், தேர்தல் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி,பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனித்து நின்றார்.

இந்த தேர்தலில் மொத்தம் 26பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிட்டனர். இந்நிலையில், நேற்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

டி.ராஜேந்தர் தோல்வி

இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகளையும், டி.ராஜேந்தர் 338 வாக்குகளையும், தேனப்பன் 87 வாக்குகளையும் பெற்றனர். 17 வாக்குகள் செல்லாதவை. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக சுயேச்சையாகப் போட்டியிட்ட கதிரேசன், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

பொருளாளராக முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின், செயலாளர் பதவிக்கு அதே அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும், டி.ராஜேந்தர் அணியைச் சேர்ந்த மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்