தமிழக தென் மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

By செய்திப்பிரிவு

அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக 20, 21 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

வடதமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

19-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 12செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூரில்9 செமீ, தேனி மாவட்டம் கூடலூர்,தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது.

அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தெற்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுவீசக் கூடும். எனவே அப்பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு புவியரசன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 mins ago

தமிழகம்

14 mins ago

உலகம்

19 mins ago

விளையாட்டு

22 mins ago

சுற்றுச்சூழல்

26 mins ago

சினிமா

34 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்