தமிழகத்தில் புதிதாக 1,714 பேர்கரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,052, பெண்கள் 662 என மொத்தம் 1,714 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 479,கோவையில் 162, செங்கல்பட்டில் 129 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு 7 லட்சத்து 63,282ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 2 லட்சத்து 1,649 பேர்உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 37,281 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 608 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,311 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சென்னையில் 4,689 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 14,470 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
18 பேர் உயிரிழப்பு
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 8 பேர், தனியார் மருத்துவமனைகளில் 10 பேர் என நேற்று 18 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,531 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,788 பேர் இறந்துள்ளனர்.கரோனா பாதிப்பு அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 10,135, கோவையில் 46,920, செங்கல்பட்டில் 46,275, திருவள்ளூரில் 39,900 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
ஆன்மிகம்
22 mins ago
தமிழகம்
36 mins ago
விளையாட்டு
29 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago