தஞ்சை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது,

‘‘குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நவ.7-ம் தேதி (இன்று) நீலகிரி, தேனி மாவட்ட மலைப் பகுதி,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

8-ம் தேதி தென் தமிழக கடலோரமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்