டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 3 நாள் பயணமாக கடந்த 4-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் சென்றார். அன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
தமிழக விவகாரங்கள்
அப்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில்சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட தமிழக விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் ஆளுநர் சந்தித்தார். அதன்பின் நேற்று முன்தினம் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து, தமிழக அரசியல் விவகாரங்கள் மற்றும் தமிழகப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தமிழக நிலவரம் குறித்து அவரிடம் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
க்ரைம்
40 mins ago
தமிழகம்
54 mins ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago