சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (டிச. 11) முதல் வரும் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், வரும் 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
மழை அளவுகள்: டிச. 10-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 11 செ.மீ., நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் 10 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, மாஞ்சோலை, கன்னடயன் அணைக்கட்டு பகுதிகளில் 9 செ.மீ.,திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, நீலகிரி மாவட்டம் பர்லியாறு, கோத்தகிரி எஸ்டேட்பகுதிகளில் 8 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூர், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் 6 செ.மீ.,திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
சினிமா
28 mins ago
க்ரைம்
46 mins ago
வர்த்தக உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago