ராஜஸ்தான் 185 ரன்கள் குவிப்பு :

By செய்திப்பிரிவு

ஐபிஎல் டி 20 தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணி. 93 ரன்கள் இலக்கை விரட்டிய கொல்கத்தா 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் துபாயில் நேற்றுநடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 185 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. எவின் லீவிஸ் 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் விளாசி அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்களில் இஷான் பொரேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், மஹிபால் லாம்ரோர் 17 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். லியாம் லிவிங்ஸ்டன் 17, ரியான் பராக் 4, ராகுல் டிவாட்டியா 2, கிறிஸ்மோரிஸ் 5, சேத்தன் சக்காரியா 7, கார்த்திக் தியாகி 1 ரன்களில் வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் 16 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் குவித்திருந்தது. ஆனால் கடைசி 4 ஓவர்களையும் கட்டுக்கோப்பாக வீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர் பஞ்சாப் பந்து வீச்சாளர்கள். அந்த அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5, மொகமது ஷமி 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 186 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது.

ஆப்கனில் தடை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதித்து ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள னர் தலிபான்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

52 mins ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்