பிரான்ஸிடமிருந்து வாங்கப்பட்ட 50 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ளன. பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது மிராஜ் ரக போர் விமானங்களில் இருந்தபடி 2000 குண்டுகள் வீசப்பட்டன.
இந்நிலையில், பிரான்ஸ் விமானப்படையில் இருந்து விடுவிக்கப் பட்ட விமானங்களை வாங்க அந் நாட்டு விமானப்படையுடன் இந்திய விமானப்படை கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமானங்கள் பறப்பதற்கு பயன்படுத்தப்படமாட்டாது என்றுமத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம், அவற்றில் உள்ள உதிரி பாகங்கள் இப்போது செயல்பாட்டில் உள்ள மிராஜ் ரக விமானங்களுக்கு தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு முன்பும் பிரான்ஸிடமிருந்து பழைய மிராஜ் ரக விமானங்களை இந்தியா வாங்கி உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago