காவல் துறை மீது பொதுமக்களுக்கு இருக்கும் எதிர்மறை எண்ணத்தை மாற்ற வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சர்தார் வல்லபபாய் படேல் போலீஸ் அகாடெமி உள்ளது. இதில் அண்மையில் பயிற்சி முடித்த நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள், காவல் பணியில் சேர்வதற்கு தயாராக உள்ளனர். இந்நிலையில், பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து நமது எல்லைகளை ராணுவ வீரர்கள் பாதுகாக்கின்றனர். அதேபோல, உள்நாட்டில் உள்ள சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீஸார் தங்களது இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றனர். சில சமயங்களில், பணி நிமித்தமாக அவர்களால் பல நாட்களுக்கு தங்கள் வீடுகளுக்கு கூட செல்ல முடியாது. பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தினருடன் இருக்க முடியாத சூழல் ஏற்படும். மக்களின் பாதுகாப்புப் பணியில் அவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். இத்தனை தியாகங்களை போலீஸார் செய்த போதிலும், பெரும்பாலான மக்களுக்கு காவல் துறை மீது எதிர்மறையான எண்ணமே இருக்கிறது.
கரோனா பரவல் தொடங்கிய போது, போலீஸார் தெருக்களில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர். இதனால் போலீஸார் மீதான தவறான எண்ணம் மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல அகன்று வந்தது. ஆனால், இப்போது மீண்டும் அதே எதிர்மறையான எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. இந்த எண்ணத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு தேவையான நடவடிக்கைகளை புதிதாக பணியில் சேரவுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளாகிய நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.
வளர்ச்சியில் உங்கள் பங்கு
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
44 mins ago
ஜோதிடம்
19 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago