யூரோ கால்பந்து தொடரில் ஜெர்மனி, போர்ச்சுகல் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
யூரோ கால்பந்து தொடரில் எஃப் பிரிவில் நேற்று முனிச் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி - ஹங்கேரி மோதின. 11-வது நிமிடத்தில் ஹங்கேரியின் ஆடம் ஸால் கோல் அடிக்க முதல் பாதியில் ஹங்கேரி 1-0 என முன்னிலை பெற்றது. 66-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஹாவர்ட்ஸ் பதில் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. அடுத்த 2-வது நிமிடத்தில் ஆண்ட்ரஸ் ஷாஃபர் கோல் அடிக்க ஹங்கேரி 2-1 என முன்னிலை பெற்றது.
84-வது நிமிடத்தில் மிக நெருக்கமான கள வியூகத்துக்கு இடையே ஜெர்மனியின் கோரெட்ஸ்கா கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜெர்மனி. இதே பிரிவில் பிரான்ஸ், போர்ச்சுகல் மோதிய ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. பிரான்ஸ் தரப்பில் பென்சீமாவும், போர்ச்சுகல் தரப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தலா இரு கோல் அடித்தனர். இந்த இரு அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
தமிழகம்
49 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago