இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலின் 2-ம் அலையின் தீவிரம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் மூன்றாம் அலை சில மாதங்களால் வரலாம் என்று கணிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக் சுகாதார பிரிவின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறும்போது, ‘‘எல்லோரும் தங்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்ப வேண்டுமெனில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். 2-ம் அலை குறையத் தொடங்கியுள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இதுதான் சரியான நேரம். தடுப்பூசி செலுத்திக்கொண்டு தொடர்ந்து கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றினால் மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்கலாம்’ என்றார்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி 42,65,157 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், கடந்த திங்களன்று 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 86,16,373 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது இரண்டு மடங்கு வளர்ச்சி ஆகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
57 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago