சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணைய தளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு,கடந்த பிப்ரவரி மாதம் புதிய ஒழுங்குமுறை விதிகளை அறிவித்தது.
ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் மாதம் ஒரு முறைஎவ்வளவு புகார்கள் வருகின்றன என்பது தொடர்பாக முழுமையான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். புகார்களைக் கையாள ஒவ்வொரு சமூகவலைதள நிறுவனமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முறையான புகார்கள் தொடர்பாக 36 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான தகவலைப் பரப்பும் முதல் நபர் யார் என்ற விவரத்தை சமூக வலைதள நிறுவனங்கள் கண்டறிந்து மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அரசோ, நீதிமன்றமோ தகவல்களைக் கேட்கும்போது, அவற்றைக் கண்டிப்பாக வழங்க வேண்டும் என புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், "வாட்ஸ்அப்பில் தகவலை பதிவிடும் முதல் நபர் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்வது என்பது பயனாளர்களின் அந்தரங்க விவகாரத்தில் தலையிடுவதாகும். இது எங்கள் நிறுவனத்தின் விதிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும் புறம்பானது. எனவே, மத்திய அரசின் இந்தக் கட்டுப்பாட்டை எதிர்க்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago