தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரோனா நோயாளிகளிடம் அவர் நலம் விசாரித்தார்.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது சுமார் 1500 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று திடீர் பயணமாக இந்த மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரோனா வார்டுகளுக்கு சென்று அங்குள்ள நோயாளிகளிடம் அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடனும் முதல்வர்கலந்துரையாடினார். மருத்துவமனையில் உள்ள மருத்துவ வசதிகள், ஆக்ஸிஜன் நிலவரம், மருந்துகளின் இருப்பு போன்ற அனைத்து விவரங்களையும் அவர் கேட்டறிந்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு செய்தார்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடின உழைப் புக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago