மகாராஷ்டிராவில் கல்வி மற்றும்வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு கடந்த 2018-ல்சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதில், "மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அந்த இடஒதுக்கீடு செல்லாது என்பதால் அதை ரத்து செய்கிறோம். ஏனெனில் மண்டல் கமிஷன் தொடர்பாக 1992-ம் ஆண்டு இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டைத் தாண்டி மராத்தா சமூகத்திற்கு அதிகளவில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை. அதற்கான முகாந்திரமும் இல்லை. எனவே இந்திரா சஹானி வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை" என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
3 hours ago