ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த ஹரிபாபு (45), லட்சுமி காந்தம்மாள் (43), பெச்சுலய்யா (60), வெங்கட ரமணம்மா (19), கிருஷ்ணவேணி (26) உட்பட 15 தொழிலாளர்கள் நேற்று அதிகாலை டிராக்டரில் பக்கத்து கிராமத்தில் தர்பூசணி பறிக்கும் பணிக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, சஜ்ஜாபுரம் எனும் பகுதியில் வந்தபோது, ஒரு வளைவில் டிராக்டர் வேகமாக திரும்பியது. அப்போது நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த ஏரியில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் மேற்கூறிய 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த நெல்லூர் எம்.எல்.ஏ தர் ரெட்டி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து நெல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago