முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக ஒரு படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கங்கனா ரனாவத். இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாகும். தற்போது இந்தப் படத்தைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை கங்கனா.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கங்கனா கூறும்போது, “நான் இந்திரா காந்தியாக நடிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும். பல முக்கிய நடிகர்களும் இந்தப் படத்தில் இடம் பெறவுள்ளனர்.
இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு அல்ல. சிறந்த பீரியட் படமாக இருக்கும். எனது தலைமுறையினர் இந்த சமூகத்தை புரிந்து கொள்ளும் விதத்தில் துல்லியமான அரசியல் படமாக இருக்கும்” என்றார்.
இந்தப் படத்தை கங்கனாவே தயாரிக்கவுள்ளார். அவசர நிலை காலகட்டத்தையும், ஆபரேஷன் புளூ ஸ்டார் குறித்தும் இந்தப் படம் பேசும் என்று தெரிகிறது. இதற்கு முன் கங்கணா ரனாவத்தை வைத்து ’ரிவால்வர் ராணி’ என்கிற படத்தை இயக்கிய சாய் கபீர், இந்தப் படத்தையும் இயக்கஉள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
8 hours ago