இரவு விடுதியில் கொண்டாட்டம் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 34 பேர் மும்பையில் கைது

By செய்திப்பிரிவு

மும்பை விமான நிலையம் அருகே உள்ள தனியார் இரவு விடுதி ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நேரம் செலவிட்டதாக சுரேஷ் ரெய்னா, ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூஸன் கான் உள்ளிட்ட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகாலை 3 மணியளவில் இந்த கைது படலம் நடந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி விடுதியை திறந்து வைத்திருந்தது, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் என கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் பின்பற்றாமல் இருந்தது, தொற்று பரப்பி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டம் 188, 269, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல் துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 34 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

2 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்