தாய்லாந்து தொடரில் சிந்து, சாய்னாபங்கேற்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவின் பாட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி.சிந்து, சாய்னா நெவால் உள்ளிட்ட 8 பேர் தாய்லாந்து ஓபன், உலக டூர் பைனல்ஸ் உள்ளிட்ட 3 தொடர்களில் பங்கேற்க உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதை கருத்தில் கொண்டு வரும் ஜனவரி மாதம் முதல் நடைபெற உள்ள 3 பாட்மிண்டன் தொடர்களுக்கான 8 பேர் கொண்ட வலுவான அணியை இந்திய பாட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. இதில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், சாய் பிரணீத், கிடாம்பி காந்த், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் வரும் ஜனவரி 12 முதல் 17 வரை தாய்லாந்தில் நடைபெறும் யோனக்ஸ் தாய்லாந்து ஓபன், 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் டொயோட்டா தாய்லாந்து ஓபன் ஆகிய தொடர்களிலும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் பிடபிள்யூஎஃப் உலக டூர் பைனல்ஸ் தொடரிலும் பங்கேற்க உள்ளனர்.

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் 9 மாதங்களுக்குப் பிறகு ஜனவரியில் நடைபெற உள்ள இந்த 3 தொடர்களின் வாயிலாக சர்வதேச போட்களில் களமிறங்குகின்றனர் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

சினிமா

3 mins ago

இந்தியா

9 mins ago

ஓடிடி களம்

27 mins ago

கருத்துப் பேழை

24 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

17 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்