இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 5டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தப் போட்டிகள் சென்னை, அகமதாபாத், புனே ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடக்கும் என்று பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
இதன்படி முதல் 2 டெஸ்ட் போட்டிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், அடுத்த 2 போட்டிகள் அகமதாபாத்தில் உள்ளமோதிரா கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5 முதல் 9–ம் தேதிவரையும், 2–வது டெஸ்ட் 13 முதல்17–ம் தேதி வரையும் சென்னையில் நடைபெறுகிறது. 3–வது டெஸ்ட் போட்டி பகலிரவாக அகமதாபாத்தில் உள்ள மோதிரா கிரிக்கெட் மைதானத்தில் 24 முதல் 28–ம் தேதி வரை நடைபெறுகிறது. இதே மைதானத்தில் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4 முதல் 8–ம் தேதி வரை சிவப்பு பந்தில் நடைபெறுகிறது.
டி20 ஆட்டங்கள் அனைத்தும் அகமதாபாத் மோதிரா மைதானத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் புனேவிலும் நடைபெற உள்ளன.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago