மும்பை தாக்குதல்:ரத்தன் டாடா உருக்கமான பதிவு

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. மிக மோசமான இந்த சம்பவத்தின் ஆண்டு தினத்தில் ரத்தன் டாடா தனது வேதனையை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தாக்குதல் நிகழ்த்தப்பட்ட முக்கியமான இடங்களில் டாடா குழுமத்துக்குச் சொந்தமான தாஜ் மஹால் பேலஸ் நட்சத்திர ஹோட்டலும் ஒன்றாகும். தீவிரவாதிகள் இங்குதான் தங்கியிருந்து தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் ஹோட்டலின் ஓவியத்தை ரத்தன் டாடா வெளியிட்டுள்ளார். இந்த ஹோட்டல் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. மும்பை நகர மக்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றாக போராடியது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் டாடா குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரம் அவர்களது தியாகத்தையும் மறந்துவிட முடியாது. நமது எதிரிகளுடன் போராடி அவர்கள் உயிர் நீத்துள்ளனர். மக்களின் ஒற்றுமை, அன்பு உள்ளிட்டவற்றை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும் என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் இந்த ஹோட்டலில் மட்டும் 31 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்