அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக அமைச்சர் தங்கமணியை தேமுதிக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி அமைத்து, தொகுதிகள் உடன்பாடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்ததை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.
இதற்கிடையே, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி வீட்டில் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் ஆகியோர் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கான சந்திப்பாக இது பார்க்கப்படுகிறது.
இருப்பினும், 41 தொகுதிகள் வரை தேமுதிக கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 14 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்திருப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதாவின் ஒப்புதல் பெற்று பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago