பிப்.27 வரை பேரவைக் கூட்டம் பி.தனபால் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பிப்.24-ம் தேதி பேரவை அலுவல்கள் நடைபெறாது. 25-ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடும். அப்போது, மறைந்த சித்த மருத்துவர் சிவராஜ் மற்றும் விருதுநகர் பட்டாசு விபத்து மற்றும் உத்தராகண்ட் பனிப்பாறை விழுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதன்பின், பேரவையில் இடைக்கால பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடங்கி 26-ம் தேதியும் நடைபெறும்.

பிப்.27-ம் தேதி இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை அளிக்கிறார். அதன்பின், 2021-22 நிதியாண்டின் செலவினங்களுக்கான முன்பண மானிய கோரிக்கை மீதான வாக்கெடுப்பு, நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு நிறைவேற்றுதல் உள்ளிட்ட அலுவல்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

வணிகம்

25 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

35 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்